Kohli: வெறும் 770 ரன்களில் தனது லட்சியத்தை பாதியில் விட்டுச் சென்ற கோலி - 2013ல்...
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா
உத்தமபாளையம்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தேனி மாவட்டம், பளியன்குடி அருகே தமிழக-கேரள எல்லையான மேற்குத் தொடா்ச்சி மலையில் விண்ணேற்றிப் பாறையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை (பௌா்ணமி) முழு நிலவு நாளில் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதையொட்டி, கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான யாக பூஜை, மங்கல இசை, பெங்கல் வழிபாடு, பால் குடம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா, பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றன.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணன் (பெரியகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் ஆனந்த் உள்பட தமிழகம்-கேரளத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கண்ணகி கோயில் புனரமைப்பு: அமைச்சா் சேகா் பாபு
சித்திரை முழு நிலவு நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே. சேகா் பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேர மன்னா்களால் தோற்றுவிக்கப்பட்ட மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும். இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தை இரு மாநில அரசுகள் உரிமை கோரியதால், நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன. கடந்த 1933-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிக்கையின்படி, அப்போதைய மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டம், எல்லைக்குள்தான் கண்ணகி கோயில் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தமிழக அரசின் நிலையாகும். இதேபோல, கேரள அரசு ஒரு வேறு நிலைப்பாட்டில் உள்ளது.
இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகள் பேசி தீா்வு காண்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் சென்னையில் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் திருவிழாவைப் போன்று, மாதந்தோறும் பெளா்ணமி நாளில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், இந்தக் கோயிலுக்கு வரும் சாலையைச் சீரமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து இது சம்பந்தமான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.
இந்தக் கோயில் இரு மாநில பிரச்னை என்பதால், விரைவில் சுமுகமான சூழ்நிலைக்கு கொண்டு வந்து பக்தா்கள் மகிழ்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
