செய்திகள் :

`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய்துள்ள தம்பதி - ஏன்?

post image

தற்போதைய உலகில் மரணத்திற்கான நேரத்தை தானே குறித்துக்கொள்ளும் செயல் சர்ச்சையான விவாதங்களில் ஒன்றாக உள்ளது.

ஸ்விட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இது சட்டபூர்வமாக இருந்தாலும் பிரிட்டன், இந்தியா உட்பட பல நாடுகளில் மரணத்தை தனக்குத்தானே தீர்மானித்துக் கொள்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த தம்பதி தற்கொலை பெட்டியில் தங்களின் மரணத்தை உறுதி செய்வதற்காக தி லாஸ்ட் ரிசார்ட் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்.

News.com AU அறிக்கையின்படி ஓய்வு பெற்ற ஆர்ஏஎப் பொறியாளரான பீட்டர் ஸ்காட் (86) அவரது மனைவி கிறிஸ்டின் (80) தற்கொலை பெட்டியை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏன் தற்கொலை பெட்டியை பயன்படுத்தி மரணத்தை விரும்புகின்றனர் என்பதற்கான காரணத்தை கூறும்போது, `தங்களுக்கு திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆவதாகவும் கிறிஸ்டினுக்கு வாஸ்குலர் டிமென்ஷியா நோய் இருக்கிறது’ என கூறுகிறார் பீட்டர் ஸ்காட்

வாஸ்குலர் டிமென்ஷியா என்பது மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்தி நினைவாற்றல், சிந்தனை ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுத்தி,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைத்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்க செய்யும் நோயாகும்.

இந்த நோயை குணப்படுத்த முடியாது. ”நாங்கள் நீண்ட மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம். ஒருவரை பிரிந்து எங்களால் இருக்க முடியாது”.. எனவே மரணத்தை தீர்மானிக்கும் பெட்டியை தேர்வு செய்ததாக பீட்டர் கூறியிருக்கிறார்

தி லாஸ்ட் ரீசெட் என்ற ஸ்வீட்ஸ் அமைப்பு சார்கோ பேட் மூலம் மரணத்தை கொடுக்கிறது. மரண பெட்டி போல் இருக்கும் இதில் மரணத்தை விரும்புவார் அதில் படுத்தவுடன் நைட்ரஜனை வெளியிட்டு ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலமாக விரைவான மரணத்தை அவர்களுக்கு கொடுக்கும் ஒரு கேப்சூல் போன்ற சாதனம் தான் சாக்கோ பேட்.

இந்தியாவில் இது சட்டபூர்வமானதா?

சுவிட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இருப்பது போல இந்தியாவில் தன்னார்வ மரணத்தை விரும்புவது என்பது சட்டபூர்வமானது இல்லை.

ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றம் சில குறிப்பிட்ட சூழலில் கருணைக்கொலையை அனுமதித்துள்ளது அதன்படி நோய்வாய்ப்பட்ட அல்லது மூளைச்சாவடைந்த நோயாளிகளுக்கு கடுமையான விதிமுறைகளின் படி கருணை கொலை அங்கீகரிக்கப்பட்டாலும் இந்தியாவில் கருணை கொலை இன்றும் சட்டவிரோதமாகவே உள்ளது.

தற்கொலை தடுப்பு மையம்

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின்... மேலும் பார்க்க

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க

பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யார... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போல... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுர... மேலும் பார்க்க