செய்திகள் :

`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?

post image

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவம் தயார்நிலையிலே உள்ளது.

பாகிஸ்தான் மீதான போர் தீவிரமாக இருந்த சமயத்தில் இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் எங்கு இருக்கிறது என போனில் விசாரித்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கேரளா போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்

கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலக லேண்ட் லைன் தொலைபேசி எண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணியளாவில் ஒருவர் போன் செய்தார். தன் பெயர் ராகவன் என்று மாற்றி கூறிய அவர், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பல் இப்போது எங்கே சென்றுகொண்டிருக்கிறது என அதன் லொகேஷன் குறித்து கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கப்பற்படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கொச்சி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொச்சி கப்பற்படை அலுவலகத்துக்கு போன் செய்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது சுவிட் ஆஃப் என வந்தது. இருப்பினும் லொகேசன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் போனில் பேசிய நபர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நடைக்காவு பகுதியைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான்(38) என தெரியவந்தது. அவர் கோழிக்கோட்டில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டார். பின்னர் கொச்சிக்கு அழைத்துச் சென்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது" என்றனர்.

கைதுசெய்யப்பட்ட முஜீப் ரஹ்மான்

முஜீப் ரஹ்மானுக்கு மன ரீதியான பிரச்னை உள்ளதாகவும், 2021-முதல் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் முஜீப்பின் பெற்றோர் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், முஜீப்புக்கு பயங்கவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை எனவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் புட்ட விமலாதித்யா தெரிவித்தார்.

முஜீப்பின் போன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் எனவும், அவர்அது சமூக வலைதள கணக்குகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஜீப் ரஹ்மான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய்துள்ள தம்பதி - ஏன்?

தற்போதைய உலகில் மரணத்திற்கான நேரத்தை தானே குறித்துக்கொள்ளும் செயல் சர்ச்சையான விவாதங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இது சட்டபூர்வமாக இருந்தாலும் பிரிட்டன், இந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க

பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யார... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போல... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுர... மேலும் பார்க்க