செய்திகள் :

பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நாகராஜன் வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு நாகராஜன் அவரது தந்தைக்கு உருக்கமாகச் சில ஆடியோ பதிவுகளை அனுப்பியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதில் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் சாதி அடிப்படையில் டார்ச்சர் செய்து வருவதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டி அதிக பணிச்சுமை  ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார்.

நாகராஜன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததாகவும், ஆனால் நேற்று வீட்டு வேலைக்காக உடனடியாக வரவேண்டும் என அந்த அதிகாரி அழைத்ததாகவும், உடனடியாக வராமல் இருந்தால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் நாகராஜனின் மனைவி உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி நாகராஜனின் தந்தை ரவி கூறுகையில். "எனக்கு 2 மகன்கள். மூத்தவன் மார்பிள் வேலை செய்துவருகிறான்.

இரண்டாவது மகன் நாகராஜன். துப்புரவுப் பணியாளராக இருந்த நாகராஜன் தேர்வு எழுதி கோர்ட்டில் அலுவலக உதவியாளராகச் சுமார் 9 மாதம் முன்பு பணியில் சேர்ந்தார்.

நாகர்கோவில் கோர்ட்டில் நல்லபடியாக வேலை செய்துகொண்டிருந்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் குழித்துறை கோர்ட்டில் இடமாற்றம் செய்தார்கள்.

அங்குள்ள அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் வேலை செய்யும்படி என் மகனை வலியுறுத்தி டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

மரங்களில் ஏறி மாங்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பறிக்கச் சொல்லியிருக்கிறார். மறுத்துப் பேசினால் சாதியைச் சொல்லி உங்களுக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள் எனத் திட்டியுள்ளனர். பலா மரம் ஏறத்தெரியாதா எனக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நீதிமன்ற ஊழியர் நாகராஜன்
தற்கொலை செய்துகொண்ட நீதிமன்ற ஊழியர் நாகராஜன்

கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை லீவு எடுத்துள்ளான். ஆனால், ஐயா வீட்டுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு போக வேண்டும் எனப் பெண் ஊழியர் ஒருவர் என் மகனிடம் தெரிவித்திருக்கிறார்.

வண்டி பஞ்சராகி உள்ளதால் இப்போது போக முடியாது எனக் கூறியிருக்கிறான் என் மகன். அதற்கு, வராமல் இருந்தால் திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்துவிடுவதாக அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் யாரும் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை. ஆனால், அந்த அதிகாரி சாதி பார்த்தது தவறானது. அந்த அதிகாரி நிறையத் தரக்குறைவாக நடந்துள்ளார். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை என் மகனின் உடலை வாங்கமாட்டோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போல... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுர... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல்போன 107 கிராம் தங்கம் - கண்டுபிடித்தது எப்படி?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட பழமையான பொக்கிஷங்கள் உள்ளன. எனவே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மளிகைக் கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்க... மேலும் பார்க்க