செய்திகள் :

பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ் காய் பேசியது என்ன?

post image

இந்திய ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய விமானப்படையின் திறனை விளக்குவதற்காக கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தினார்.

அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று விலகியுள்ள விராட் கோலியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ராஜீவ் காய்
ராஜீவ் காய்

முப்படை ராணுவ அதிகாரிகளுடன் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ராஜீவ் காய், "இன்று நாம் கிரிக்கெட் பற்றியும் பேச வேண்டும். இன்று விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதைக் கவனித்தேன். பல இந்தியர்களைப் போல அவர் எனக்கும் ஃபேவரைட்" என்றார்.

ஆஷஸ் தொடரை மேற்கோள்காட்டி பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைகளைத் திறம்படத் தடுத்தது குறித்துப் பேசினார்.

"எங்கள் ராணுவ நிலையங்களையும் தளவாடங்களையும் குறிவைப்பது மிகவும் கடினமானது" என்றார்.

Air Defense
Air Defense

"1970களில் என நினைக்கிறேன், ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராகப் புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடைபெற்றது.

அப்போது ஆஸ்திரேலியாவிடம் இரண்டு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஜெஃப் தாம்சனும் டென்னிஸ் லில்லியும் இங்கிலாந்து பேட்டிங் லைன்-அப்பை கிழித்துவிடுவார்கள்.

அப்போது ஆஸ்திரேலியர்கள் ஒரு பழமொழியை உருவாக்கினர். 'Ashes to ashes, dust to dust, if Thommo doesn't get ya, Lillee must' இதன் பொருள் ஒரு பௌலரிடம் நீங்கள் தப்பினால் மற்றொருவர் நிச்சயம் உங்கள் விக்கெட்டை எடுத்துவிடுவார்.

இதன் லேயர்களைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிந்துவிடும். நீங்கள் எத்தனை லேயர்களைக் கடந்துவந்தாலும் இந்த கட்டமைப்பில் உள்ள ஏதோ ஒரு லேயர் உங்களைத் தாக்கும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்தான்!

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்குவேலை வாய்ப்புகளைஅடையாளம் காட்டும் சேவையைத்தொடங்கியிரு... மேலும் பார்க்க

`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "எங்களது சண்டை தீவிரவாத... மேலும் பார்க்க

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?ர... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க