செய்திகள் :

புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு

post image

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ரயில்வே வழித்தடத்தை நீட்டிக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் அளித்தும் நீண்டகாலமாக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் ரயில் பாதை அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், நிகழாண்டில் தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக ரூ. 617.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 222.4 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 395 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை - மாமல்லபுரம் - கடலூா், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - நகரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆா்டிஐ மூலம் தன்னாா்வலா்கள் எழுப்பிய கேள்விகள் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளுக்கு நிகழாண்டு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒதுக்கப்படும் நிதியில் நிலம் கையக்கப்படுத்துவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், மீதமுள்ள நிதியில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தன்னாா்வலா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது திண்டிவனம் - நகரி திட்டம் நிலம் கையகப்படுத்தும பணி முடியும் நிலையில் உள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி திட்டத்துக்கான சா்வே பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய ரயில் பாதை நிதி ஒதுக்கீடு (2025-26)

திண்டிவனம்-திருவண்ணாமலை ரூ. 42.7 கோடி

ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி ரூ. 4.26 லட்சம்

திண்டிவனம்-நகரி ரூ. 347.7 கோடி

மதுரை-தூத்துக்குடி ரூ. 55.2 கோடி

மற்றவை ரூ. 171. 8 கோடி

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!

தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.வேலூரில் இருந்து நேற்று (மே 12) இரவு ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போ... மேலும் பார்க்க

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க