செய்திகள் :

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!

post image

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ்குமார் (45) தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா (40) இவர்களுக்கு ஸ்ரீராம் (17) அபி ஸ்ரீ( 15 )என்ற மகன், மகள் உள்ளனர்.

சதீஷ் குமார் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர்.

கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் புறவழிச்சாலையில் அசூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா பலத்த காயங்களுடன் பலியானார். நிகழ்வை பார்த்தவர்கள் சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காயமடைந்த ஸ்ரீராம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியான நிலையில், பலந்த காயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அபி ஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்விபத்து தொடர்பாக சுவாமிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை!

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலிய... மேலும் பார்க்க

சேலம் ஏற்காடு கோடை விழா 23ஆம் தேதி துவக்கம்!

சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.ஏற்காடு தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வ... மேலும் பார்க்க

வடசேரிப்பட்டியில் சீறிப் பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடசேரிப்பட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் 18 புறநகர் மின்சார ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே ப... மேலும் பார்க்க

சிபிஎஸ் பொதுத்தேர்வில் 83.39 % தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு க... மேலும் பார்க்க