செய்திகள் :

சிபிஎஸ்இ: மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி!

post image

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது.

இந்தநிலையில் 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 11.30 மணியளவில் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மொத்தம் 83.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் இந்தாண்டும் 5.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்களும், விஜயவாடாவில் 99.60 சதவீத மாணாக்கர்களும், பிரயாக்ராஜில் 79.53 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க

முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான ப... மேலும் பார்க்க

ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!

மும்பையிலுள்ள மகாரஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு மும்பையிலுள்ள மந்த்ராலயா எனப்படும் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 12) மாலை மின்ன... மேலும் பார்க்க