அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் எச்சரித்தார்.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள் முன்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் சுயமரியாதை உலக அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. நமது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் முன்பு பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை. பாகிஸ்தான் இதயத்தை நாம் எப்போது துளைத்தோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.