செய்திகள் :

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

post image

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-26ல் ரூ. 6.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது ஆயுதப் படையை நவீனமயமாக்குவதையும், ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் உள்ள நிலைத்தன்மையையும் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’’பாதுகாப்புத் துறை யுக்தியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், தனியார் துறை பங்களிப்பு மற்றும் புதுமை ஆகியவை பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தன. இது இந்தியாவை தன்னிறைவடையச் செய்வதோடு மட்டுமின்றி, உலக அரங்கில் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுத ஏற்றுமதிகொண்ட நாடாகவும் மாறியுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் போர் சூழல்களில் வலிமைமிக்க சக்தியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கருவிகள் இருப்பதை உலகம் உணர்ந்து வருகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய விமானப் படையினர் வான்வெளிப் பரப்பிலேயே வைத்து தகர்த்தனர். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதையும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க