செய்திகள் :

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

post image

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இறுதி நாளான இன்று, சஞ்சீவ் கன்னாவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

''ஒய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை; மாறாக சட்டத் துறையில் ஏதையாவது செய்யலாம்'' எனக் குறிப்பிட்டார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை குறித்து பதிலளித்த அவர்,

''நீதித் துறையின் சிந்தனை தீர்க்கமானதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்ந்து பகுத்தறிவுடன் நாங்கள் முடிவு செய்கிறோம். அதனைச் சரியாகச் செய்யும்போது முடிவுகளை எடுக்கிறோம். பிறகு, நீங்கள் செய்தது சரியா? தவறா? என்பதை எதிர்காலம் உங்களுக்குச் சொல்லும்'' எனக் கூறினார்.

சஞ்சீவ் கன்னா யார்?

1960 மே 14ஆம் தேதி பிறந்தவர் சஞ்சீவ் கன்னா. 1983ஆம் ஆண்டு பார் கவுன்சில் உறுப்பினரானார். ஆரம்பக்கட்டத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து பின்னர், தில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார்.

2005 ஆம் ஆண்டு தில்லியின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார்.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பளித்தவர். அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வில் உறுப்பினராக இருந்தவர்.

இவர், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எச்.ஆர். கன்னாவின் மருமகனாவார். இவரின் தாத்தாவான சரவ் தயாள், முக்கிய வழக்குரைஞராவார். (1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையை விசாரிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியில் இருந்தவர்.)

இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க

முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான ப... மேலும் பார்க்க

ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!

மும்பையிலுள்ள மகாரஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு மும்பையிலுள்ள மந்த்ராலயா எனப்படும் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 12) மாலை மின்ன... மேலும் பார்க்க