அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!
இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.62 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.48 ஐ தொட்ட நிலையில், முடிவில் 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33-ஆக முடிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, டாலருக்கு நிகராக, இந்திய ரூபாய் 22 காசுகள் உயர்ந்து ரூ.85.36ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: லாப முன்பதிவால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிவு!