செய்திகள் :

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

post image

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

உஜாலா, பிரில், மார்கோ மற்றும் எக்ஸோ ஆகிய பிராண்டுகளை வைத்திருக்கும் ஜோதி லேப்ஸின் கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.78.15 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

மார்ச் காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து ஜோதி லேப்ஸின் வருவாய் 1 சதவிகிதம் அதிகரித்து ரூ.666.96 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, ​​நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.667 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் காலாண்டில் ஜோதி லேப்ஸின் மொத்த செலவுகள் ரூ.571.23 கோடியாக இருந்தது. அதே வேளையில் மார்ச் காலாண்டில் அதன் மொத்த வருவாய் 1.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.682.44 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.672.96 கோடியாக இருந்தது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஜோதி லேப்ஸின் நிகர லாபம் ரூ.370.38 கோடியாக இருந்தது, இதுவே அதன் முந்தைய ஆண்டு அதன் நிகர லாபம் ரூ.369.30 கோடியாக இருந்தது.

நிதியாண்டு 2025ல், ஜோதி லேப்ஸின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 3.26 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,902.56 கோடியாக இருந்தது.

ஜோதி லேப்ஸ் லிமிடெட்டின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் ரூ.350.20 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: விலை உயர்வு குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!

மும்பை: நிலம், வான் மற்றும் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமா... மேலும் பார்க்க

லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.லாரி வாடகைகள் ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க