செய்திகள் :

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

post image

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.

ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க தகவல்களை வெளியிட ஏராளமான ஊகங்கள் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுடன் இணைந்து செயல்பட ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருவதாக இன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியானது.

இதனையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் கட்டணங்கள் உயர்வு ஆகியவற்றால் $900 மில்லியன் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவிலிருந்து பெற்றதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் விலை உயர்வு குறித்து ஆய்வாளர்கள் பல மாதங்களாக ஊகித்து வந்த நிலையில், அத்தகைய நடவடிக்கையால் அதன் சந்தைப் பங்கை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சாம்சங் போன்ற போட்டியாளர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளியிடும் சாதனங்கள் நுகர்வோரை வெகுவாக ஈர்க்க முயற்சித்து வருகின்றனர்.

மேலும், சீனாவில் பெரும்பாலான ஆப்பிள் சாதனங்கள் அசெம்பிளிங் செய்யப்படுகின்ற நிலையில் அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்களில் சிக்கியுள்ள மிக முக்கியமான நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டியுள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

இதையும் படிக்க: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!

மும்பை: நிலம், வான் மற்றும் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமா... மேலும் பார்க்க

லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.லாரி வாடகைகள் ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க

ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.வழக்கம் ப... மேலும் பார்க்க