செய்திகள் :

லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

post image

சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.

லாரி வாடகைகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்து வந்த நிலையில், கொல்கத்தா - குவஹாட்டி - கொல்கத்தா வழித்தடத்தில் 14 சதவிகிதமும், மும்பை - சென்னை - மும்பை வழித்தடத்தில் 8 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

பெரும்பாலான லாரி வாடகைகள் மாறாமல் இருந்தபோதிலும், தில்லி - சென்னை - தில்லி வழித்தடம் 2.5 சதவிகிதமும், தில்லி - பெங்களூரு - தில்லி வழித்தடம் 1.6 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணங்கள் 5 முதல் 10 சதவிகிதம் அதிகரித்த போதிலும், லாரி வாடகை ஏப்ரல் மாதத்தில் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஒய்.எஸ்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், வலுவான கிராமப்புற தேவை மற்றும் மேம்பட்ட சாலை இணைப்பால் ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை மாதந்தோறும் 12 சதவிகிதமும், பேருந்துகளின் விற்பனை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்துள்ள வேளையில், இரு சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை 30 சதவிகிதமும் மின்சார கார்களின் விற்பனை 4 சதவிகிதம் சரிந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், மின்சார கார்கள் 58 சதவிகிதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவிகிதமும் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 40 சதவிகிதம் வளர்ந்துள்ளது.

தொழில்துறை, சுரங்கம் மற்றும் வணிக நடவடிக்கைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு 2 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில் டீசல் நுகர்வு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: மாருதி விற்பனை 7% உயா்வு

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமா... மேலும் பார்க்க

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் ... மேலும் பார்க்க

ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.வழக்கம் ப... மேலும் பார்க்க

யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!

புதுதில்லி: தனியார் வங்கியான யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41-ஆக முடிவு!

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ரூபாயின் சரிவை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. டாலருக்கு ... மேலும் பார்க்க