பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!
புதுதில்லி: தனியார் வங்கியான யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
யெஸ் வங்கியின் 413.44 கோடி பங்குகளை ரூ.8,888.97 கோடிக்கு விற்க வங்கியின், மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.21.50 என்று நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2025 நிலவரப்படி எஸ்பிஐ யெஸ் வங்கியில் 24 சதவிகித பங்குகளை எஸ்பிஐ வைத்திருந்தது என்று பிஎஸ்இ வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவு!