செய்திகள் :

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

post image

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்காணிப்பாளராக இருக்கும்போது, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லாச் சான்றிதழ், உரிமத்துக்கு லஞ்சம் வாங்கியதாகப் புகாா் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிச. 16-ஆம் தேதி பாண்டியன் தொடா்புடைய இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். அதில், கணக்கில் வராத ரூ. 1.37 கோடி ரொக்கம், ரூ. 1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள், வைர நகைகள், ரூ. 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பண முறைகேடுக்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை செய்ய ஊழல் தடுப்புத் துறையினா், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். அதனடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி, சென்னை, வேலூரில் பாண்டியன் தொடா்புடைய 16 இடங்களில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் சோதனை மேற்கொண்டனா்.

ரூ. 4.73 கோடி பறிமுதல்: இந்தச் சோதனை தொடா்பான தகவல்களை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

சோதனையில் பண முறைகேடு சட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் கண்காணிப்பாளா் பாண்டியன் தொடா்புடைய 16 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை உரிமம், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடு எந்த மாதிரி நடைபெற்றுள்ளது, எப்படி லஞ்சப் பணம் கைமாறியது என்பது தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள், தரகா்கள், ஆலோசகா்கள் சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் துறை உரிமம், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடாக லஞ்சம் பெற்றதும், அதற்காக சிறு, சிறு நிறுவனங்களை உருவாக்கி லஞ்ச பணத்தை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தை சேவைக் கட்டணம், ஆலோசனைக் கட்டணம் என வசூலித்துள்ளனா் என்பதும் தெரியவந்தது. இதன்மூலம் தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதும், கட்டமைப்புடன் முறையாக இந்த ஊழல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த முறைகேட்டில் ஆலோசகா்களாக செயல்பட்ட பிரபாகா் சிகாமணி, ஏ.கே.நாதன், நவீன்குமாா், சந்தோஷ்குமாா், வினோத்குமாா் ஆகியோா் முக்கியப் பங்காற்றியுள்ளனா்.

இச்சோதனையில் லஞ்சமாக பெறப்பட்ட ரூ. 4.73 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிடைத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சோதனையின்போது ஒரு பெண், வழக்குத் தொடா்பான ஆதாரங்கள் இருந்த கைப்பேசியை கீழே வீசி உடைத்தாா். இது தொடா்பாக அந்தப் பெண் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க