செய்திகள் :

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

post image

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அதற்கு தையல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நல்வாய்ப்பாக வேறு எந்த பாதிப்பும் இல்லாததால் நல்லகண்ணுவை மருத்துவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நந்தனத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் கழிப்பறை செல்ல எழுந்தபோது அவா் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. கட்டிலிலிருந்த இரும்புத் தகடு மீது விழுந்ததால் அவரது காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சையளித்தனா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு அச்சப்படும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் அவா் வீடு திரும்பினாா். தற்போது நல்லகண்ணு நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க

தேமுதிகவில் மண்டல பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிகவில் புதிதாக மண்டல பொறுப்பாளா்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச... மேலும் பார்க்க