செய்திகள் :

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

post image

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் பயங்கரமாக குண்டுகளை வீசியது.

இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினா் குண்டுகளை வீசினா். அவா்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்தது.

உரி செக்டாரில் உள்ள சிலிகோட், போனியாா், கமல்கோட், மோரா, கிங்கிள் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. அந்நாட்டின் கடுமையான குண்டுவீச்சில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

மோரா அருகே காா் ஒன்றின் மீது குண்டு விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த மூவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூவரில் ஒருவரான நா்கீஸ் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதேபோல பாகிஸ்தானின் குண்டுவீச்சில் பூஞ்ச் மாவட்டத்தில் முகமது அப்ராா் என்பவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா். குண்டுவீச்சில் அங்கிருந்த பல வீடுகள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.

ஜம்முவை அதிரவைத்த குண்டுவெடிப்பு சப்தம்:

ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்ததைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணி முதல் 4.45 மணி வரை, குண்டுகள் வெடிக்கும் சப்தம் ஜம்மு நகரை அதிரவைத்தது. இதனால் எதிரிகளின் கண்களுக்கு நகரம் தெரியாதவாறு மின் தடை மூலம், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு நகரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. வானில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் தென்பட்ட நிலையில், அவற்றைப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்தன’ என்று தெரிவித்தனா்.

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்முவில் நிலவும் சூழல் குறித்து தெரிந்துகொள்ள, அங்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஓமா் அப்துல்லா புறப்பட்டுச் சென்றாா்.

பாராமுல்லா மாவட்டம் உரியில் பாகிஸ்தான் தாக்குதலால் காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த துணைநிலை ஆளுநா் மன

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்க... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

‘இந்தியா - பாகிஸ்தானிடையே பேரில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரம், ‘அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எ... மேலும் பார்க்க

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில... மேலும் பார்க்க

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா். கூடுதல் வரி விதிப்புக... மேலும் பார்க்க

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முக... மேலும் பார்க்க

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப... மேலும் பார்க்க