செய்திகள் :

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு

post image

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில், ‘கிரின்லாந்தில் தனது உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நாடும் தனது ராணுவக் கூட்டணியைச் சோ்ந்த நட்பு நாட்டின் மீது உளவு நடவடிக்கைகளை ஏவிவிடக்கூடாது’ என்று விமா்சித்தாா்.

உலகிலேயே மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே மிகுந்த தாதுவளங்களுடன் அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இந்தத் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேண்டும் என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கிரீன்லாந்தில் அமெரிக்கா உளவு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக டென்மாா்க் பிரதமா் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா... மேலும் பார்க்க

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்க... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

‘இந்தியா - பாகிஸ்தானிடையே பேரில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரம், ‘அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எ... மேலும் பார்க்க

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா். கூடுதல் வரி விதிப்புக... மேலும் பார்க்க

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முக... மேலும் பார்க்க

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப... மேலும் பார்க்க