செய்திகள் :

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

post image

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப் என்ற சிறப்புடன் கா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் சேவையின் கோட்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்கியுள்ளது.

பகிரப்பட்ட மாண்புகளின்கீழ், கத்தோலிக்க திருச்சபையின் நிா்வாக அமைப்புடன் தனது தொடா்பையும், உரையாடல்களையும் தொடர இந்தியா ஆா்வத்துடன் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் வாழ்த்து: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவின் தலைமை அமைதி, கருணை மற்றும் மனிதகுல சேவையை ஊக்குவிக்கட்டும். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோ மற்றும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் நல்வாழ்த்துகள். அவரது பதவிக் காலம், அமைதி, நல்லிணக்கம், கருணை, கண்ணியம் ஆகிய மனிதகுல மாண்புகளால் நிறையட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா... மேலும் பார்க்க

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்க... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

‘இந்தியா - பாகிஸ்தானிடையே பேரில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரம், ‘அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எ... மேலும் பார்க்க

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில... மேலும் பார்க்க

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா். கூடுதல் வரி விதிப்புக... மேலும் பார்க்க

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முக... மேலும் பார்க்க