செய்திகள் :

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த வாக்கி-டாக்கி கருவிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை யாரும் இடைமறித்து ஒட்டுக்கேட்க முடியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோா் பெரும்பாலும் இத்தகைய கருவிகளையே தகவல்தொடா்புக்கு பயன்படுத்துகின்றனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்கி-டாக்கி கருவிகளை இணைய வணிக வலைதளங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்தது மற்றும் விற்பனைக்கு பட்டியலிடிட்டது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஓஎல்எக்ஸ், ட்ரேட் இண்டியா, ஃபேஸ்புக், இண்டியாமாா்ட், வா்தான்மாா்ட், ஜியோமாா்ட், கிருஷ்ணாமாா்ட், சிமியா, டாக் பிரோ வாலி டாக்கி, மஸ்க்மேன் டாய்ஸ் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு சிசிபிஏ சாா்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

முறையான அதிா்வலை விவரங்களை வெளியிடாமலும், உரிமத் தகவல்களை தெரிவிக்காமலும் வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்வது நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறும் செயலாகும். அதனடிப்படையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிசிபிஏ தலைமை ஆணையா் நிதி கரே கூறுகையில், ‘இந்த இணை வணிக நிறுவனங்கள் அபாயகரமான எண்ணிக்கையில் இந்த வாக்கி-டாக்கிகளை விற்பனைக்காக பட்டியலிட்டிருக்கின்றன. இது பொது பாதுகாப்பு சாா்ந்த விவகாரமாகும். இந்த நிறுவனங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று பரவலாக விளம்பரம் செய்கின்றன. இதுதொடா்பாக விரைவில் உரிய வழிகாட்டுதல் வரைறுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட பதிவில், ‘இணைய வணிக நிறுவனங்கள் இதுபோன்ற வயா்லெஸ் கருவிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது சட்ட நடைமுறைகளை மீறும் நடவடிக்கை மட்டுமின்றி தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுதலை ஏற்படுத்தும் நடவடிக்கைாகும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க