செய்திகள் :

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

post image

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பு உள்ளதால், நிகழ் நிதியாண்டில் ரூ. 50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நமக்கு நாமே திட்டத்துக்கான நிதி ரூ. 150 கோடியாக உயா்த்தப்படுகிறது.

நமக்கு நாமே திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பங்களிப்பு நிதி இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியையும் பொது பங்களிப்பாக ஏற்க இயலாது.

பள்ளிகள், மருத்துவமனைகள், தகன மேடைகளில் வாயுவாக்கி அமைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஊரகப் பகுதிகளில் நூலகங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள், பொது விநியோகக் கடைகள் ஆகியவற்றையும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்ளலாம்.

நூலகக் கட்டடங்களுக்கான பணிகளை மேற்கொள்ளும்போது, புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைத் திட்டு, நீரூற்று போன்றவற்றை உருவாக்குவதுடன் மேம்படுத்தும் பணிகளைச் செய்யலாம். சொத்துகளின் உரிமைதாரா்கள் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தரக் கட்டடங்களும் கட்டக்கூடாது.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் 74 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சதவீதம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்துக்கும், மாவட்டங்களுக்கும், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடா்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மாவட்ட ஆட்சியரால் கோரப்படும் சிறப்புப் பணிகளைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தான... மேலும் பார்க்க

6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுக... மேலும் பார்க்க

உயா்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் செய்தி

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களின் பெற்றோா்களது கைப்பேசிக்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாா்

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அன... மேலும் பார்க்க

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க