செய்திகள் :

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

post image

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேருக்கு நீதி வழங்கும் வகையில் கடந்த மே 7-ஆம் தேதி, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகா்த்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் புதன், வியாழக்கிழமை இரவுகளில் மலிவான ட்ரோன்களை இந்திய எல்லைகளில் வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனங்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன.

ஜம்மு, உதம்பூா், சம்பா, அக்நூா், நாக்ரோடா, பதான்கோட் ஆகிய இடங்களில் இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள், ஏவுகணைகள், போா் விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே அழிக்கும் வகையில் ரேடாா் தொழில்நுட்பத்துடன் வான் பாதுகாப்பு சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த தானியங்கி வான் பாதுகாப்பு சாதனங்களால் பெரும் உயிா், பொருள் சேதம் தடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்-400...

ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு சாதனம் 380 கி.மீ. தொலைவு வரையில் சென்று வேகமாக வரும் எதிரி ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி தவிடுபொடியாக்கும் திறன் படைத்தது.

பராக்-8 எம்ஆா்-எஸ்ஏஎம்: இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் சுமாா் 70 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கும் வல்லமை படைத்தது.

ஆகாஷ்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், சுமாா் 25 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். இவை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ஸ்பைடா்: இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 15 கி.மீ. தொலைவு வரையில் தாக்கக் கூடியதாகும்.

குறுகிய தொலைவு சாதனங்கள்:

ரஷியாவின் இக்லா-எஸ் (6.கி.மீ.)

இக்லா-1எம் (5 கி.மீ.)

ஓஎஸ்ஏ-ஏகே-எம் (10 கி.மீ.)

பெசோரா ஏவுகணைகள், எல்-70 துப்பாக்கிகள் (3.5. கி.மீ.)

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சாதனம்...

ஹெச் க்யூ-9: சீனாவினிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் அதிகபட்சமாக 120 முதல் 300 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கி அழிக்கக் கூடியதாகும்.

ஸ்பாடா: பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 20 முதல் 25 கி.மீ. தொலைவு வரையில் சென்று தாக்கவல்லது.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க