செய்திகள் :

India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்புத்துறை சொல்வதென்ன?

post image

மூன்றாவது நாளாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.

தற்போது, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து கூறியிருப்பதாவது...

"இந்தியா - பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே உள்ள 26 இடங்களில் டிரோன்கள் தென்பட்டுள்ளன. இவை ஆயுதம் தாங்கிய டிரோன்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த 26 இடங்களில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் அடங்கும்.

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு...!

துரதிர்ஷ்டவசமாக, ஆயுதம் தாங்கிய டிரோன் ஒன்று, ஃபெரோஸ்பூரில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உள்ளூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு, ஆன்டி-டிரோன் இயந்திரம் மூலம் இந்த மாதிரியான வான்வழி தாக்குதல்களை டிராக் செய்து வருகிறது. நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்றும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பீதி அடையத் தேவையில்லை என்றாலும், விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம்." எனத் தெரிவித்துள்ளது.

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவின் முன்னெடுப... மேலும் பார்க்க

`நாம் நினைத்தால் பாகிஸ்தானை ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம்; ஆனால்..!' - அண்ணாமலை ஆவேசம்

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்... மேலும் பார்க்க