செய்திகள் :

Sindoor: `இப்போது நாட்டுக்காக என் குங்குமத்தை அனுப்புகிறேன்’ - மணமகளின் வைரல் வீடியோவின் பின்னணி

post image

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானின், பச்சோரா தாலுகாவில் உள்ள புங்கானைச் சேர்ந்தவர் மனோஜ் தியானேஷ்வர் பாட்டீல். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மே 5 திங்கட்கிழமை பச்சோரா தாலுகாவில் உள்ள கலாம்சாரா கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்றப் பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த நாள் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த மோதல்போக்கு தாக்குதலாக தொடங்கியது. அதனால், 8-ம் தேதி மீண்டும் ராணுவப் பணியில் இணைந்துகொள்ள வேண்டும் என மனோஜ் தியானேஷ்வர் பாட்டீலுக்கு ராணுவம் உத்தரவிட்டது

அதனால் அவர் மே 8 வியாழக்கிழமை மீண்டும் ராணுவத்துக்குப் புறப்பட்டார். அவரை மணமக்கள் வீட்டார் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.

அப்போது மணமகள் யாமினி பாட்டீல், ``நாட்டை விட எதுவும் பெரியதல்ல. நான் எப்போதும் என் கணவருடன் இருக்கிறேன். இப்போது நாட்டைப் பாதுகாக்க என் சிந்தூரத்தை (குங்குமத்தை) அனுப்புகிறேன்." எனப் பேசினார்.

போர் ஒத்திகைப் பயிற்சி: "எனக்கு நாடுதான் முக்கியம்" - திருமணத்தை 2 மணி நேரம் தள்ளிவைத்த மணமகன்

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலைச் சமாளிக்க, அனைத்து மாநில அரசுகளும் போர் ஒத்திகையை நிகழ்த்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.அதன் அடிப்படையில், "போர்க்காலங்களின்போது இந்திய எல்ல... மேலும் பார்க்க

Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!

அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், "பொற்கோயில்" எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ... மேலும் பார்க்க

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது ... மேலும் பார்க்க

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மன... மேலும் பார்க்க

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க