செய்திகள் :

போர் ஒத்திகைப் பயிற்சி: "எனக்கு நாடுதான் முக்கியம்" - திருமணத்தை 2 மணி நேரம் தள்ளிவைத்த மணமகன்

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலைச் சமாளிக்க, அனைத்து மாநில அரசுகளும் போர் ஒத்திகையை நிகழ்த்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில், "போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம்.

ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, சைரன் ஒலியின்போது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்." என வலியுறுத்தப்பட்டிருந்தது.

Operation Sindoor
Operation Sindoor

இந்தப் போர் ஒத்திகைப் பயிற்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பீகார் மாநிலத்தில் ஒரு மணமகன் திருமணத்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தள்ளி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் வசிக்கும் சுஷாந்த் குஷ்வாஹா, புதன்கிழமை மாலை 6 மணிக்கு மணமகளின் வீட்டிற்குப் பராத் ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தார்.

அப்போது அரசின் போர் ஒத்திகைப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தகவல் வந்திருக்கிறது. அதில் பங்கெடுக்க மணமகன் முடிவெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய மணமகன் சுஷாந்த் குஷ்வாஹா, ``நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்குக் காரணம் என் திருமணம் மட்டுமல்ல.

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

இரு நாட்டுக்கும் இடையே நீடிக்கும் பதற்றமான சூழலில் இந்தியா அரசின் போர் ஒத்திகைப் பயிற்சி நடந்தது.

திருமணம்
திருமணம்

தேசியப் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 244 மாவட்டங்களில் எனது மாவட்டமும் ஒன்று என்பதை அறிந்தவுடன், பாதுகாப்புப் பயிற்சியில் சேருவதற்கான எனது முடிவைக் குடும்பத்தினருக்குத் தெரிவித்தேன்.

இந்தப் பயிற்சியில் நான் ஒரு பகுதியாக இருந்தது பெருமையான தருணம். எனக்குத் திருமணத்தை விட நாடுதான் பிரதானம்.

ராணுவ வீரர்கள் எல்லைகளில் சென்று சண்டையிடுவார்கள். தேவைப்பட்டால், நாங்களும் அதைச் செய்வோம்" என்றார்.

அவரின் பயிற்சி ஒத்திகைக்குப் பிறகு திருமண ஏற்பாடுகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!

அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், "பொற்கோயில்" எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ... மேலும் பார்க்க

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது ... மேலும் பார்க்க

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மன... மேலும் பார்க்க

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க