செய்திகள் :

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஆந்திர முதல்வர்

post image

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது மன்னிக்க முடியாத செயல் மட்டுமின்றி இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேயத்திற்கும் சவால் விடும் செயல். இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார்.

பாகிஸ்தான் தனது போக்கை சரிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்க கட்டாயப்படுத்திவிட்டது.

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

இந்த நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ஆந்திரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு தான் அஞ்சலி செலுத்துவதாகவும், மேலும் அவரது குடும்பத்தினருடன் நாடு எப்போதும் துணை நிற்கும்.

இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாயக், நாட்டிற்காகப் போராடி வீரமரணமடைந்தார். நமது வீரர்கள் ஓய்வு அல்லது உணவு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறார்கள்.

ஆந்திர முழுவதும் உள்ள மக்கள் விழிப்புடன் அதேசமயம் கடினமான காலங்களில் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும். தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது. ஒருவேளை போா்ப் பதற்றம் மேலும... மேலும் பார்க்க

மே 15 வரை 32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகா், சண்டீகா் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்... மேலும் பார்க்க

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், வடக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என ... மேலும் பார்க்க

எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம் தகவல்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்... மேலும் பார்க்க