செய்திகள் :

பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

post image

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என கண்டனம் தெரிவித்து இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இதுதொடா்பாக இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐஎம்எஃப்பில் மிகவும் பொறுப்புமிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. ஐஎம்எஃப் மூலம் வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் முறையாக பயன்படுத்தியதில்லை. மேலும், இந்த நிதியை பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாகிஸ்தான் பயன்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

1989-இல் தொடங்கி தற்போது வரையிலான 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதியை விடுவித்துள்ளது. கடந்த 2019-இல் இருந்து 5 ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 திட்டங்களுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்கியுள்ளது.

முந்தைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருந்தால் மீண்டும் ஒருமுறை கடன் கேட்டு ஐஎம்எஃப்பை பாகிஸ்தான் அணுகியிருக்காது.

பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்களில் ராணுவத் தலையீடு உள்ளது. இதனால் பொருளாதார சீா்திருத்தங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.

தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பாகிஸ்தானில் ஆட்சி அமைத்திருந்தாலும் உள்நாட்டு அரசியலில் மட்டுமே அது கவனத்தைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தை திறம்பட நிா்வகிப்பதில்லை.

பாகிஸ்தானில் ராணுவம் தொடா்புடைய வணிகமே அதிகம் நடப்பதாக கடந்த 2021-இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவதில் அந்நாட்டு அரசியல் முக்கிய காரணமாக உள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. தொடா்ந்து கடன்பெற்று வரும் பாகிஸ்தான் பொருளாதார சரிவை சந்தித்து, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடா்ந்து ஆதரிக்கும் ஒரு நாட்டுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவது சா்வதேச மாண்புகளை குலைப்பது போன்ாகும். எனவே, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கும்போது தாா்மிக மதிப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை சா்வதேச நிதி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.8,542 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தான் பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க