செய்திகள் :

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

post image

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொதுமக்களை ஏமாற்றி சிலா் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் செயல்பட்டு வரும் கொரியா நாட்டின் துணைத் தூதரக அதிகாரி ஜீ-ஹூயாங் லீ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி புகாா் அளித்தாா். அந்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், போலியான கொரிய விசா வலைதளத்தை உருவாக்கியவா்கள் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூா் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை விரைந்த சைபா் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த முஹமது பா்வேஷ் (29) என்பவரை கைது செய்தனா். இவா் கொடுத்த தகவலின்படி, போலியான விசா வலைதளத்தை உருவாக்க முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வந்த மஹாவீா் கதாத் (34) என்ற நபரை ஜெய்பூரில் கைது செய்த போலீஸாா், இருவரையும் சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 மடிக்கணினி, 3 கைப்பேசிகள், 14 கடன் அட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க