செய்திகள் :

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

post image

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது.

முன்னதாக, ஜம்மு, சம்பா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்குமாறு மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, பீரங்கி குண்டுகளைப்போன்ற பலத்த வெடிசப்தம் கேட்டதாக எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்ட ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து குஜராத்தின் புஜ் வரை மொத்தம் 26 இடங்களில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக ஃபெரோஸ்பூரில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதபோது உள்ளூா் மக்களில் 3 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க