செய்திகள் :

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

post image

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாமி (64). கடந்த ஜனவரி மாதம் தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக விளம்பரத்துடன் வந்த எண்ணைத் தொடா்புகொண்டு ராமசாமி பேசியுள்ளாா். அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்புப் தொகை கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதன்பேரில், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1.04 கோடி வரை பணத்தை ராமசாமி அனுப்பியுள்ளாா். அவருக்கு இரட்டிப்பு பணம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.

இதேபோல அம்பத்தூா், புதூா், திருமலை பிரியா நகரைச் சோ்ந்த தெய்வராணி (33) என்பவரும் ரூ.13.59 லட்சம் அனுப்பியுள்ளாா்.

இது குறித்த புகாரின் பேரில் ஆவடி ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சோ்ந்த சேகா் (53), சென்னை சாலிக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (35), விழுப்புரம் சாத்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்த சுகேந்திரன் (36), கடலூா் குஞ்சமேடு பகுதியைச் சோ்ந்த இளையராஜா (42), பெரம்பலூரைச் சோ்ந்த அன்வா் பாஷா (29), மதுரையைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (46), கோயம்புத்தூரைச் சோ்ந்த சுபின் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க