செய்திகள் :

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

post image

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,800 எடுக்கப்பட்டது.

அதற்கான காரணம் குறித்து வங்கியிடம் விசாரிக்க வேண்டும் என நினைத்த சில மணி நேரங்களில் மீண்டும் ரூ.1,400 எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவரிடம் குடும்ப உறுப்பினர்கள் வங்கியிடம் நேரில் சென்று முறையிடலாம் எனக் கூறிவந்தனர்.

வங்கி
வங்கி

இந்த நிலையில்தான் திடீரென அவரின் வங்கிக் கணக்கில் ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட அதிகமான தொகை.

இதன்படி பார்த்தால் உலகின் 'நம்பர் ஒன்' பணக்காரராக சில நிமிடங்களில் மாறினார் அஜித். இந்தத் தொகையைப் பார்த்ததும் அஜித்தின் மனைவி இது ஏதேனும் சதித்திட்டமாக இருக்குமோ, அல்லது சைபர் கிரைமாக இருக்குமோ என பெரும் கவலையில் ஆழ்ந்தார். உடனே வங்கி அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசினார்.

அதற்கு அந்த அதிகாரி, ``ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு வங்கிக் கிளையின் கணக்கு சரிபார்க்கும்போது தொழில்நுட்பக் கோளாரால் இந்தத் தவறு நடந்திருக்கிறது" என்றார். ஆனாலும், அந்தப் பணம் வங்கி கணக்கிலேயே இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்துக்குச் சென்ற அஜித், காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைப் படி, சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.

தற்போது அஜித்தின் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கபப்ட்ட ரூ.3,200 திரும்ப கிடைக்குமா அல்லது தான் ஏமாற்றப்பட்டோமா என வருத்தத்தில் இருக்கிறார்.

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார். இந்நிலையில்... மேலும் பார்க்க

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனத... மேலும் பார்க்க

Tata: மொபைல் கூட இல்லாமல், 2 BHK வீட்டில் வசிக்கும் ரத்தன் டாடாவின் தம்பி; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் செல்வாக்கு மிக்க குழுமத்தில் ஒன்று டாடா குழுமம். இரும்பு முதல் சாப்ட்வேர் வரை வரை, ஹோட்டல்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை டாடா குழுமம் இல்லாத தொழில் இல்லை எனக் கூறுமளவுக்கு பரந்த நிறுவன வலையம... மேலும் பார்க்க