செய்திகள் :

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

post image

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள சுஷா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் எகுடெ (29). இவர் சீர்திருத்த முறையில் திறந்த வெளியில் பொதுமக்களை அழைத்து மிகவும் எளிய முறையில் திருமணம்செய்து கொண்டார்.

விவசாயிகளுக்காக சாலை அமைத்த தம்பதி

முதுகலை வேளாண் பட்டதாரியான எகுடே தனது திருமணத்தை எளிய முறையில் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிபந்தனையை முன்வைத்து திருமணத்திற்கு பெண் பார்த்தார்.

யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலியின் குடும்பத்திற்கு எகுடேயின் நிபந்தனைகள் பிடித்திருந்தன. இதையடுத்து இருவரது திருமணம் எளிய முறையில் நடந்தது.

அதே சமயம் திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு இருந்த தொகையில் தனது கிராம விவசாயிகளுக்காக சாலை ஒன்றை எகுடே அமைத்து கொடுத்து அனைவரது பாராட்டை பெற்றுள்ளார்.

இது குறித்து எகுடே கூறுகையில், "எங்களது கிராம விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாய பொருள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகூட சரியாக போக முடியாது. அதுவும் மழைக் காலம் என்றால் அந்த வழியை பயன்படுத்தவே முடியாது. எனவே இச்சாலையை அமைத்துக்கொடுத்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கருதினேன்.

எனவே 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த விவசாய சாலையை அமைத்து கொடுத்திருக்கிறோம். குண்டு குழிகள் சரி செய்யப்பட்டு பயன்படுத்தும் வகையில் சாலையை உருவாக்கி இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

எகுடேயின் செயல் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க மக்களே!

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனத... மேலும் பார்க்க

Tata: மொபைல் கூட இல்லாமல், 2 BHK வீட்டில் வசிக்கும் ரத்தன் டாடாவின் தம்பி; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் செல்வாக்கு மிக்க குழுமத்தில் ஒன்று டாடா குழுமம். இரும்பு முதல் சாப்ட்வேர் வரை வரை, ஹோட்டல்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை டாடா குழுமம் இல்லாத தொழில் இல்லை எனக் கூறுமளவுக்கு பரந்த நிறுவன வலையம... மேலும் பார்க்க

`ரூ.10,000 பந்தயம்' - 5 பாட்டில் மதுவை ராவாய் குடித்த இளைஞர்.. சவாலுக்காக உயிரை விட்ட பரிதாபம்..!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு. அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்... மேலும் பார்க்க

``social media-வை விட, நிஜ வாழ்க்கையின் மதிப்பு முக்கியம்..'' - Influencer மரணம் குறித்து டாப்ஸி

2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போ... மேலும் பார்க்க

`வீட்டில் டார்ச்சர்' - டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை - நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி... மேலும் பார்க்க