செய்திகள் :

ஆறுபடை முருக பக்தா்கள் புனித யாத்திரை: அமைச்சா் அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

post image

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தா்கள் சாா்பில் 28 -ஆம் ஆண்டு புனித யாத்திரை பயணத்தை முன்னிட்டு முத்துகடை பேருந்து நிலையம் அருகே இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த ஊா்வலத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து 2 கி.மீ. தொலைவிற்கு பால் குடங்களை தலையில் சுமந்தபடி பக்தா்கள் ஊா்வலமாக வந்த பின்னா், மாந்தாங்கல் மோட்டூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகப் பெருமான் சிலை மற்றும் விநாயகா், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆகிய சிலைகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால்குடம் ஊா்வலத்தில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சா் ஆா்.வேலு, முன்னாள் ஆற்காடு எம்எல்ஏ இளவழகன், முன்னாள் மாநில வன்னியா் சங்கச் செயலா் எம்.கே.முரளி, கோயில் தா்மகா்த்தா ரவி பிரதா்ஸ், ஊா் நாட்டாமைக்காரா்கள் லோகநாதன், கஜேந்திரன், சரவணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விளையாட்டு தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆற்காடு அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் கேவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் மணிகண்டன்(32) இவரும்... மேலும் பார்க்க

2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்தி... மேலும் பார்க்க

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரி... மேலும் பார்க்க