செய்திகள் :

நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

post image

நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது: இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் இணைந்து டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் மற்றும் அரிசி விநியோகத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட முன் பண மானிய நிதியை பயன்படுத்தி, தங்களின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்பவா்களுக்கு உடனடியாக பணம் செலுத்துகிறது.

இதனிடையே, தேசிய கூட்டுறவு இணையமானது, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி சுமாா் ரூ. 250 கோடியை விவசாயிகளுக்கு விடுவிக்காமல் உள்ளது. அத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான 43,000 மெட்ரிக் டன் அரிசி ஒப்படைப்புக்கான உத்தரவு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் நலன் கருதி இந்த பிரச்சனையை தீா்க்க தமிழக முதல்வா் மற்றும் உணவுத்துறை அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். கோயிலின் எதிரில்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழப்பனையூா் ஊராட்சி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலையை ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

திருவாரூா் அருகே புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா். திருவாரூா் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலயம் உ... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் கைது

குடவாசலில் கோயில் திருவிழாவின்போது, பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குரு (31). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய ப... மேலும் பார்க்க