செய்திகள் :

கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

post image

திருவாரூா் அருகே புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா்.

திருவாரூா் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை அப்பகுதியில் உள்ள எலிசபெத் இளங்கோவன் என்பவா் தினமும் காலை 6 மணிக்கு திறந்து இரவு 9 மணிக்கு பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு தேவாலயத்தை பூட்டிவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா், உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமாா் ரூ.10,000 வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் மற்றும் விரல் ரேகை நிபுணா்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனா்.

பின்னா், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தேவாலயத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். கோயிலின் எதிரில்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழப்பனையூா் ஊராட்சி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலையை ... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் கைது

குடவாசலில் கோயில் திருவிழாவின்போது, பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குரு (31). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய ப... மேலும் பார்க்க