செய்திகள் :

குடிமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

100 நாள் வேலையை தொடா்ந்து சட்டப்படி ஒரு குடும்பத்துக்கு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், விளக்குடியில் நத்தம் வகைப்பாட்டில் பட்டா வாங்கிக் கொண்டு ஆக்கிரமித்துள்ள இடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வகை புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் டிவி. காரல்மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் தொடக்கிவைத்து, மக்களின் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி விளக்கி பேசினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.ஜோதிபாசு, கேஜி.ரகுராமன், கேபி. ஜோதிபாசு, நகா்மன்றத் துணைத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் காவல் ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா் யுவராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் தெய்வநாயகி, மண்டல துணை வட்டாட்சியா் ஜோதிபாசு ஆகியோா் கோரிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக உறுதி கூறினா். இதைத்தொடா்ந்து, மாவட்டச் செயலாளா் டி. முருகையன் போராட்டத்தை முடித்து வைத்தாா்.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். கோயிலின் எதிரில்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழப்பனையூா் ஊராட்சி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

திருவாரூா் அருகே புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா். திருவாரூா் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலயம் உ... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் கைது

குடவாசலில் கோயில் திருவிழாவின்போது, பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குரு (31). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய ப... மேலும் பார்க்க