செய்திகள் :

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

post image

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியையும், டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ. 2.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரின் மீன் விற்பனையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால், சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதி ஆகியவற்றின்கீழ், 82 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, மீன் கழிவுநீரினை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்லும் தனி வடிகால் மற்றும் வாகன நிறுத்தம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், சென்னை மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உள்பட அரசு அலுவலர்கள், மீனவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தொழில் சாா்ந்த ஒலிப்பதிவு நிகழ்ச்சி (பாட்காஸ்ட்) தொடக்கம்: சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐசிஎஸ்ஆா் கட்டடம், சென்னை ஐஐடி, கிண்டி, பிற்பகல் 1.30. சித்திரைப் பெருவிழா - சோமாஸ்கந்தா் ரிஷப வாகனத்தில் த... மேலும் பார்க்க

சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடு... மேலும் பார்க்க

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு

சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சென்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இராமாபுரம், மேலூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இது குறித்து தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்... மேலும் பார்க்க