செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே: அன்பில் மகேஸ்

அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதம் பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 97.01 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

இதிலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, அரியலூர் மாவட்டத்தில் 98.32 சதவிகிதம், ஈரோடு மாவட்டத்தில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 95.06 சதவிகிதம், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99 சதவிதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68 சதவிகிதம் பேரும், கலைப் பிரிவுகளில் 82.90 சதவிகிதம், தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ச... மேலும் பார்க்க

'தி வயர்' இணைய தளத்துக்குத் தடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

'தி வயர்' இணைய தளத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ வெள்ளிக்கிழமையான இன்று அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு ... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி

எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணையை அரசு தோ்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க