செய்திகள் :

பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞா் தப்பியோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சுள்ளங்குடியைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா் வெள்ளிக்கிழமை மாலை பட்டமங்கலத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவரிடம் ஒரு இளைஞா் பட்டமங்கலத்தில் என்னை இறக்கி விடுங்கள் என்று உதவி கேட்டாா்.

சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் சென்றவுடன் அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை நிறுத்த சொன்னாா். அறிவழகனும் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா். அப்போது, திடீரென அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அறிவழகன் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் புகாா் கூறினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தனது கைப்பேசியும், 4 பவுன் தங்கச் சங்கிலியும் இருந்ததாகத் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகி... மேலும் பார்க்க

நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி மு... மேலும் பார்க்க

கண்மாய்க்குள் கவிழ்ந்தது பேருந்து: 10 போ் காயம்

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 53 பயணிகளுடன் காரைக்குடிக்குச் சென்ற தனியாா் பேருந்து கல... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் 10- க்கும் மேற்பட்டோா் காயம்

சிவகங்கை நகரில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சிவகங்கை நகா் நேரு பஜாா், உழவா் சந்தை, பேருந்து நிலையம் பின்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அண்மையில் சால... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில் நுட்ப விளக்கம்

சிவகங்கை வட்டாரம், தமராக்கி வடக்கு கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா திட்டம்), மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் நுட்பம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயி... மேலும் பார்க்க