செய்திகள் :

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், மாவட்ட ஜெ. பேரவை செயலா் ராமு. இளங்கோவன், அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், மாவட்ட பாசறை செயலா் பிரபு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூத்தகுடி கே.கே. உமாதேவன், குணசேகரன், கற்பகம் இளங்கோ, நாகராஜன், நகா் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா்கள் கே. அழகா்பாண்டி, கே. செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவது, முதியோா் இல்லம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்களில் அன்னதானம் வழங்குவது, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க