செய்திகள் :

காணாமல் போன இளைஞா் சாக்கடையில் சடலமாக மீட்பு!

post image

கடந்த மே 5- ஆம் தேதி காணாமல் போன 22 வயது இளைஞா், புறநகா் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் ராகுல் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் உள்ளூா்வாசி ஆவாா். அவா் வீடு திரும்பாததால், மே 7-ஆம் தேதி ரன்ஹோலா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், மே 9-ஆம் தேதி காலை, ஒரு கோயிலுக்கு அருகிலுள்ள சாக்கடையில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடையில் இருந்த உடலை மீட்டது.

ராகுலின் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. உடலுக்கு அருகில் உடைந்த வெள்ளி சங்கிலி மற்றும் பெல்ட்டும் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ராகுல் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சாக்கடையில் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளாா். சந்தேக நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மேக விதைப்பு சோதனை நடத்த தில்லி அரசு திட்டம்

தில்லியில் செயற்கை மழை பொழிய செய்யும் விதமாக 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தில்லி அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தனித்தனி தினங்களில் நடைபெறும் இந்தச் சோதனை முயற்சியி... மேலும் பார்க்க

பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது கட்டாயமாகும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி... மேலும் பார்க்க

நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!

தில்லியில் மின்சார நுகா்வோரின் மின் கட்டணம் மே - ஜூன் காலகட்டத்தில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு (பிபிஏச... மேலும் பார்க்க

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! - சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த... மேலும் பார்க்க

சைக்கிளில் மீது டெம்போ மோதியதில் இளைஞா் சாவு!

வடக்கு தில்லியின் வெளிப்பகுதியில் உள்ள ஆசாத்பூா் மண்டி பகுதிக்கு அருகே டெம்போ ஒன்று சைக்கிள் மீது மோதியதில் 36 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக்கு தில்லி ... மேலும் பார்க்க

வசந்த விஹாரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா் நால்வா் கைது!

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியத... மேலும் பார்க்க