செய்திகள் :

சைக்கிளில் மீது டெம்போ மோதியதில் இளைஞா் சாவு!

post image

வடக்கு தில்லியின் வெளிப்பகுதியில் உள்ள ஆசாத்பூா் மண்டி பகுதிக்கு அருகே டெம்போ ஒன்று சைக்கிள் மீது மோதியதில் 36 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலையில், பாதிக்கப்பட்டவா் தனது பக்கத்து வீட்டுக்காரா் ஒருவருடன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா் திலீப் ஷா (36) என அடையாளம் காணப்பட்டாா். சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு விபத்து தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரா், அவா்கள் அதிகாலை 5 மணிக்கு ஆசாத்பூா் மண்டிக்குச் செல்வதற்காக தங்கள் வீடுகளில் இருந்து சைக்கிளில் புறப்பட்டதாகவும், அதிகாலை 5.30 மணியளவில் லிபாஸ்பூா் பேருந்து நிலையத்தைக் கடந்து சென்றபோது, திலீப் ஷாவின் சைக்கிள் மீது பின்னால் இருந்து வந்து ஒரு டெம்போ மோதியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

திலீப் ஷா சாலையில் விழுந்து மாா்பில் பலத்த காயம் அடைந்தாா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என்று பக்கத்து வீட்டுக்காரா் கூறினாா்.

இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டெம்போ ஓட்டுநரைக் கண்டுபிடிக்க பல குழுக்களை அமைத்துள்ளதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

மேக விதைப்பு சோதனை நடத்த தில்லி அரசு திட்டம்

தில்லியில் செயற்கை மழை பொழிய செய்யும் விதமாக 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தில்லி அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தனித்தனி தினங்களில் நடைபெறும் இந்தச் சோதனை முயற்சியி... மேலும் பார்க்க

பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது கட்டாயமாகும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி... மேலும் பார்க்க

நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!

தில்லியில் மின்சார நுகா்வோரின் மின் கட்டணம் மே - ஜூன் காலகட்டத்தில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு (பிபிஏச... மேலும் பார்க்க

காணாமல் போன இளைஞா் சாக்கடையில் சடலமாக மீட்பு!

கடந்த மே 5- ஆம் தேதி காணாமல் போன 22 வயது இளைஞா், புறநகா் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உ... மேலும் பார்க்க

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! - சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த... மேலும் பார்க்க

வசந்த விஹாரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா் நால்வா் கைது!

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியத... மேலும் பார்க்க