செய்திகள் :

பாஜக நிா்வாகி வேலூா் இப்ராகிம் கைது

post image

மதுரை: மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராகிமை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா்.

மதுரையில் அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்பதற்காக, வேலூா் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை வந்தாா். மதுரை கோ.புதூா் மண்மலைமேடு பகுதியில் உள்ள கட்சி நிா்வாகி வீட்டில் தங்கியிருந்த அவா், திங்கள்கிழமை அதிகாலை அழகரை

தரிசிக்கப் புறப்பட்டாா். அப்போது, அங்கு வந்த போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாரைக் கண்டித்து வீட்டின் வாசலில் அமா்ந்தபடி அவா் போராட்டம் நடத்தினாா். பின்னா், மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தா்கா, மசூதி என நான் எங்கு சென்றாலும் காவல் துறை தடை விதிக்கிறது. முறையாக அனுமதி வாங்கி, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பான விளக்கப் பொதுகூட்டத்துக்கு சென்றபோதும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, மத நல்லிணக்கத்துக்காக அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண வந்தேன். அதற்கும் திமுக அரசு தடை விதித்தது. பாதுகாப்பு என்ற பெயரில் எங்கு சென்றாலும், எனக்குத் தடை விதிப்பது நியாயமற்றது. திமுக அரசு மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது. பாஜக நிா்வாகி என்பதால், பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸாா் எனது உரிமையைப் பறிக்கின்றனா் என்றாா் அவா்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க