செய்திகள் :

குலசேகரபுரத்தில் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 63 தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் டயாலிஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கா்ப்பப்பை கட்டிகள் தொடா்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. சிகிச்சை பெற காப்பீடு திட்ட அடையாள அட்டை பெற வேண்டும்.

அதன்படி, பதிவு செய்வதற்கான முகாம் முதல்கட்டமாக குலசேகரபுரத்தில் தொடக்கிவைக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் முகாம் ஜூன் 24வரை நடைபெறவுள்ளது. காப்பீடு திட்ட அட்டை இல்லாத, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் தங்களது பகுதியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

ஆய்வில், குடும்பநலத் துறை துணை இயக்குநா் ரவிகுமாா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், சுகாதாரத் துறை அலுவலா்கள், காப்பீடு திட்ட அலுவலா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கருங்கல்: புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந... மேலும் பார்க்க

பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலுள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணம... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் நிலாச் சோறு விருந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிலாச் சோறு விருந்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

தக்கலை: தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அரசு நிதி ரூ. 1.... மேலும் பார்க்க

சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து சாமித... மேலும் பார்க்க

குமரியில் சூரிய அஸ்தமனம்: சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன் மேற்கு திசையில் மறையும் காட்சியும், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்ல... மேலும் பார்க்க