செய்திகள் :

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

post image

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் மே 19-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

வழக்குரைஞா் ஹரிசங்கா் பாண்டே என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, போஸ்டனில் உள்ள புரெளன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உரையாற்றினாா். அப்போது, கடவுள் ராமரும், அவரின் சகாப்தத்திலிருந்து வெளிவந்த கதைகளும் கற்பனையான புராண கதைகளாகும் என்று குறிப்பிட்டுள்ளாா். இது சனாதனவாதிகளின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆற்றப்பட்ட வெறுப்புப் பேச்சாகும். எனவே, உரிய பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிமன்ற கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீரஜ் குமாா் திரிபாதி, மனு வரும் 19-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டதோடு, இதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றாா்.

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன்கள்?

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சா்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய சில ட்ரோன்கள் பறந்து வந்ததாகவும், அவற்றைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா் என்றும் ரா... மேலும் பார்க்க