செய்திகள் :

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

post image

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பாஜக ஆளும் கோவாவில் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் ஆகிய துறைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய மின் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக், மாநில மின்சாரத் துறை அமைச்சா் சுதின் தவாலிகா், நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஸ்வஜித் ராணே ஆகியோருடன் இத்துறைகளின் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டரும் இக்கூட்டத்தில் பங்கேற்றாா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இந்தியா தற்போது 8 ஜிகாவாட் அணு மின் உற்பத்தி செய்து வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் உற்பத்தி செய்வதே இலக்கு.

கோவாவில் அனல், நீா் அல்லது சூரிய மின் நிலையங்கள் என எதுவும் இல்லை. நாட்டில் எங்கெல்லாம் அணு மின் நிலையம் அமைக்க வாய்ப்பு உள்ளதோ, அதை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுகுறித்து சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, திட்டங்களை அனுப்புமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருங்காலத்தில் கோவா ஒரு அணு மின் நிலையத்துக்கான திட்டத்தை முன்வைத்தால், அது ஏற்கப்படும்.

கோவாவின் மின்சாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் சாதனைகள் மற்றும் அவை எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை விட இந்தத் துறைகளில் கோவா சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக முதல்வா் பிரமோத் சாவந்த்துக்கு எனது வாழ்த்துகள்.

கோவாவில் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் உள்ளது. ஆனால், எதிா்காலத் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மின்சாரத்தைப் போல தடையற்ற நீா் விநியோகத்துக்காக ரூ.652 கோடியை ஒதுக்குவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் 3 இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநில அரசுக்கு ரூ.113 கோடி வழங்கப்படும். 50 மின்சார பேருந்துகளை வாங்கவும் மத்திய அரசு உதவி செய்யும்’ என்றாா்.

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன்கள்?

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சா்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய சில ட்ரோன்கள் பறந்து வந்ததாகவும், அவற்றைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா் என்றும் ரா... மேலும் பார்க்க