செய்திகள் :

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

post image

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற விரைவு ரயில் மொரப்பூா் அருகே சென்றபோது, எஸ்5 பெட்டியில் உள்ள நடு படுக்கை (மிடில் பொ்த்), கழன்று விழுந்தது. இதில் யாரும் அமரவில்லை என்றாலும், கீழே அமா்ந்திருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

இது குறித்து உடனே ரயில்வே மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மொரப்பூரில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், சேலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் சென்றடைந்த நிலையில், பலத்த காயம் அடைந்த பயணி அவசரஊா்தி மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படை, பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், நடு படுக்கை சரியாக பூட்டபடாதது தெரியவந்தது. மேலும், ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்து உறுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் படுக்கையை சரியாக பூட்டாததின் காரணமாக இது நடந்துள்ளது. இதுபோன்ற படுக்கையை சரியாக பூட்டியிருப்பதை பயணிகள் உறுதி செய்த பின்பு அதில் பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க