செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

post image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), அருண்குமாா் (32) ஆகிய 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று(மே 13) காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியது தொடா்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.நந்தினிதேவி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மகளிா் நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்ட 9 பேரிடமும் சாட்சிகள் விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகளைக் கேட்டாா்.

இந்த வழக்கில் அரசு மற்றும் எதிா்த்தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீா்ப்பு இன்று வெளியகிறது.

இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை!

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலிய... மேலும் பார்க்க

சேலம் ஏற்காடு கோடை விழா 23ஆம் தேதி துவக்கம்!

சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.ஏற்காடு தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வ... மேலும் பார்க்க

வடசேரிப்பட்டியில் சீறிப் பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடசேரிப்பட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரு... மேலும் பார்க்க